கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட் அருகே வி.பாளையம் ஊராட்சியில் தந்தை பெரியார் நகர் பகுதியில் இருந்த மண் சாலையானது சேறும், சகதியுமாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். இதுகுறித்து செய்தி கடந்த வாரம் தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த சாலையை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.