உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அவசர பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே ஆஸ்பத்திரி கட்டிடத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.