நடவடிக்கை தேவை

Update: 2025-12-14 15:08 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பகுதியில் கொசுத்தொல்லை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெரும் முதியோர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற  நோய் ஏற்படும் அபாயமும் அதிகஅளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்