நாய்கள் தொல்லை

Update: 2025-12-14 10:38 GMT

திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் கிராமத்தில் நாய்கள் அதிகளவில் உள்ளது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் கோழி,ஆடுகளையும் நாய்கள் கடித்து கொல்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்