திட்டக்குடி அடுத்த சிறுமங்கலம் இந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பார்க்கின்றனர்.