குருசாமிபாளையம் அடுத்த பிள்ளாநல்லூரில் ஏரி ஒன்று உள்ளது. அலவாய்மலையில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஏரியை நிரப்பும். தற்போது இந்த ஏரி சீமை கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதன் காரணமாக ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேலமரங்களை அடியோடு அகற்றிட அதிகாரிகள் முன்வருவார்களா?