பொதுமக்கள் அவதி

Update: 2025-11-23 10:46 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் இரவில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க முன்வருமா?


மேலும் செய்திகள்