மதுரை நகர் வில்லாபுரத்தை அடுத்த தெற்கு வாசல் செல்லும் மேம்பாலம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவர் பெருமளவு சேதமடைந்தும், சில இடங்களில் சுவர் உடைந்து அபாயமாக காட்சியளிக்கின்றது. இதனால் அப்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாலத்தை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?