கோவில்பட்டி முகம்மது சாலிஹாபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. கால்நடைகளையும் கடித்து குதறுகின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.