கரூர் மாவட்டம் புகழூர் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த பொது சுகாதார வளாகம் சிதலமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.