நசியனூர் பேரூராட்சியில் உள்ள சி.எஸ்.ஐ. தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடம் பயன்படுத்த முடியாமல் இருந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் கழிப்பிட வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சி.எஸ்.ஐ. தெருவில் புதிதாக கழிப்பிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.