விபத்து அபாயம்

Update: 2025-11-02 15:08 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதி முக்கிய சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் அச்சமடைவதோடு நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சாலையை கடக்க காத்து நிற்கும் பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்