வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2025-11-02 14:15 GMT

பட்டுக்கோட்டை பகுதி பாளமுத்தி கிராமத்தில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. இந்த நிலையில் வாய்க்கால் பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்தோடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்