விபத்து அபாயம்

Update: 2025-11-02 13:17 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் அருகே சீத்தப்பட்டி உள்ளது. இங்கு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த இடத்தில் உள்ள மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு உள்ளது. இருபுறம் சர்வீஸ் ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ள நிலையில், இந்த வழியாக செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு சர்வீஸ் ரோட்டில் செல்லாமல் சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ்சை விட்டு இறங்கி தேசிய நெடுஞ்சாலையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டே செல்கின்றனர். எனவே அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் பஸ்களும், கரூரிலிருந்து அரவக்குறிச்சி செல்லும் பஸ்களும் சீத்தப்பட்டி சர்வீஸ் ரோடு வழியாக சென்று வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்