சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2025-11-02 10:52 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கம் எறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தேவைகளுக்கு பயன்படும் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நீர்மட்ட அளவை காட்டும் அளவுகோல் சேதமடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அளவுகோலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்