வாறுகால் வசதி வேண்டும்

Update: 2025-10-26 15:22 GMT

விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தென்றல் நகர் சாலை 2-வது தெருவில் போதிய வாறுகால் வசதி இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் பருவமழையால் சாலையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி குடியிருப்புகளுக்குள் நுழைவதுடன் கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகின்றது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் வாறுகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்