காட்டுமன்னார்கோவிலில் சிதம்பரம்- திருச்சி பழைய தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இவைகள் சாலையிலேயே படுத்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.