தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஈ.பி.காலனி கல்யாணசுந்தரம் நகர் முதல் தெருவில் குப்பை தொட்டி இல்லை. இதனால் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் இரை தேடி பன்றிகள் அதிகளவில் வருகின்றன. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைகளை அகற்றவும், புதிதாக குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.