மதுரை வார்டு எண் 47 மண்டலம் 4 தெற்கு வாசல் சின்ன கடை வீதி பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுவதால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்களா?