ஆபத்தான விளம்பர பதாகை

Update: 2025-09-28 17:53 GMT

 சோளிபாளையம் அருகே பாரதி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிழற்குடை இல்லாமல் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் அங்குள்ள மரத்தடியில் நிற்பார்கள். மக்களுக்கு இடையூறாக மரத்தை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்