சிவகங்கை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையில் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.