தர்மபுரி மாவட்டம் மோளையானூர் ஊராட்சி பூனையானூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் உள்ளது. தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த கிராமத்தில் இருந்து மக்கள் சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் நிழற்கூடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை இருந்தது. மழை, வெயில் காலங்களில் நிழற்கூடத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நிழற்கூடம் மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் பாழடைந்து உள்ளது. எனவே நிழற்கூடத்தை அகற்றி புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
-அஜித்குமார், பூனையானூர்.