தஞ்சாவூர் மேல வெளி ஜெபமாலை புரம் புதுத்தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகன் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.