தெருநாய் தொல்லை

Update: 2025-09-28 07:32 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளை ராஜலட்சுமி நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முஹம்மது சுஹைல், பெருவிளை.

மேலும் செய்திகள்