ரீத்தாபுரம் பகுதியில் கரையான்குளம் உள்ளது. இந்த அப்பகுதி மக்கள் குளத்தை குடிநீர் மற்றும் பாசன வசதி உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்திற்கு பாம்பூரி கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த கால்வாயை செடிகள் வளர்ந்து புதராக காணப்படுவதால் குளத்திற்கு தண்ணீர் வருது தடைபட்டுள்ளது. இதனால் தற்போது குளத்தில் தண்ணீர் வற்றி குட்டைபோல் மாசடைந்து காணப்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி சீரமைப்பதுடன், பாம்பூரி கால்வாயில் செடிகொடிகளை அகற்றி தண்ணீர் பாய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, பத்தறை காலனி.