ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பூவானி பேட்டை ஆறுமுனை சந்திப்பில் உள்ள ஆறு முனை சோலார் விளக்கு பழுதாகி எரியாமல் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது சோலார் விளக்குகள் சரி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே தங்கள் புகாரை செய்தி மூலமாக வெளியிட்ட தினத்தந்திக்கும் சோலார் விளக்குகளை சரிசெய்து கொடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.