சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை.அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிலும் கர்ப்பிணிகள், குழந்தைகள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கொசுக்களால் டெங்கு,மலேரியா போன்ற தொற்றுநோய் பரவம் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கை வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.