சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-21 12:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் நீர் பழனியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. மேலும் மழைக்காலங்களில் சுற்று சுவர்கள் ஈரம் பட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார நிலைய கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்