விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி போதிய அளவில் இல்லை. மேலும் சுகாதார வளாக வசதியும் இல்லாததால் பஸ் நிலையம் வரும் பயணிகள் குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதியும், சுகாதார வளாகமும் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?