மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அங்கு இலவச பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. அந்த கழிப்பிடம் முறையாக பராமரிப்படுவது இல்லை. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.