பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2025-09-07 11:53 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரூருக்கு தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகளும், வேலை நிமித்தமாக செல்லும் பொதுமக்களும் ஜவுளி பூங்கா அருகில் உள்ள முதல் பஸ் நிறுத்தத்திற்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ - மாணவிகள், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்