சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதியில் தெருநாய்கள் நடமாட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அங்கு உள்ள சாலைகளில் அவைகள் ஆக்ரோஷமாக சுற்றி திரிவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழந்தைகள், சிறுவர்கள் என சாலையில் விளையாடும்போது அவைகள் கடிக்க விரட்டிவருவது போன்ற அவலநிலையும், இதற்கு பயந்து ஓடும்போது கை, கால்களில் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்களை அங்கிருந்து அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.