தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2025-08-17 17:08 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பீனியாற்றின் குறுக்கே தார் சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக மெணசி, பூத நத்தம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும், பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்கின்றன. மேலும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தரைப்பாலம் ஓரம் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவில் வருபவர்கள் பலர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே தரை பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-பாலா, பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்