கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் செல்லும் பிரதான சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்குவதோடு பிறரையும் விபத்தில் சிக்க வைக்கின்றனர். இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே இந்த பகுதியில் இயக்கப்படும் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.