சுங்கான்கடையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருவழிப்பாதையிலும் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் பழைய பஸ்நிறுத்தத்தில் உள்ள சேதமடைந்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் மது குடிக்கும் இடமாக இருந்து வந்தது. இதுபற்றி தினத்தந்தி ‘புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்பட்ட நிழற்குடையை இடித்து அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.