தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-10 17:07 GMT

சூலூர் அருகே மைலம்பட்டி கரையாம்பாளையம் பாலாஜி நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்