தென்காசி மாவட்டம் கீழக்கடையம் 2-வது வார்டில் புதிய சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாரியப்பன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு சாலை பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.