விருதுநகர் மாவட்டம் ஒ.முத்துலாபுரம் ஊராட்சியில் மேற்கு தெரு பகுதியில் தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதி போதிய அளவில் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதோடு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமா?