சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் சிலர் ஆபத்தை உணராமல் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதையினர் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தக்க அபராதம் விதிக்கவும் வேண்டும்.