விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி செல்லும் சாலையில் சாமிநத்தம் விலக்கு பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலுமாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் வெயில் மற்றும் மழை நேரங்களில் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?