பாலக்கோடு ஒன்றியம் எர்ரனஅள்ளி கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பணிகளின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமாகி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணிகண்டன், எர்ரனஅள்ளி.