பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-07-20 11:21 GMT

கரூர் பாளையம் சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளது. சின்னமநாயக்கன்பட்டி, பெரியார் நகர், மாரியம்மன் நகர், செல்வம் நகர், அண்ணா நகர், ஜோதி நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலை நிமித்தமாக கரூர் மற்றும் பாளையம் பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் பஸ் ஏற வரும் பயணிகளும், பொதுமக்களும் வெயில் மற்றும் மழையில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்