புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் பகுதியில் சமுதாய கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த கூடுதல் வாடகை செலுத்தி தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை இருக்கிறது. எனவே சமுதாய கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.