கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், அண்ணா நகர் சாலை ஓரத்தில் ஒரு டெலிபோன் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பமானது தற்போது சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கம்பம் சாலையில் விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.