சென்னை செனாய்நகரில் மகப்பேறு ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். ஆனால் இந்த ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி எங்கு உள்ளது என தெரியாமல் சுற்றித்திரியும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரி நுழைவுவாயிலில் பெயர்பலகை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.