சென்னை கே.கே.நகர், ராணி அண்ணா நகர் வீட்டுவசதி வாரியம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மினி லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது வழங்கப்படவில்லை. இதனால் இங்கு உள்ள மக்கள் குடிநீரை பணம்கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாநகராட்சி குடிநீர்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.