திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மதுராபுரி ஊராட்சி முசிறி மெயின் ரோட்டில் மின்சார அலுவலகத்திற்கு எதிராக உள்ள புளியமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. இந்த மரம் பலத்த காற்று அடிக்கும்போது முறிந்து விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.