திருட்டை தடுக்க கோரிக்கை

Update: 2025-07-06 11:28 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் ,குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, நடையனூர், முத்தனூர், சேமங்கி, கவுண்டன்புதூர், ஓலப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், பல்வேறு தொழில் செய்பவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. செல்வந்தர்கள், விவசாயிகள் வீட்டை பூட்டிவிட்டு அடிக்கடி வெளியில் சென்று வருகின்றனர். இதனை நோட்டமிட்டு வரும் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், பணங்களை திருடிச் சென்று விடுகின்றனர். எனவே திருட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில், முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதுடன், போலீசார் ரோந்து வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்