சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாலான கண்மாய்களில் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும் கண்மாய் பகுதியை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.