சீதப்பாலில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.